சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,788 ஆக அதிகரித்துள்ளது.
பெய்ஜிங்,
சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது. சீனா மட்டும் அல்லாது உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரானோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவின் வீரியம் தற்போது குறையத்தொடங்கியுள்ளது. இதனால், தற்போது சீனாவில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது.
சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2788 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளாகி இருப்போரின் எண்ணிக்கையும் 78 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளது. தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. நெதர்லாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story