நைஜீரியா: பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் உருண்டு விபத்து - 9 பேர் பலி, 5 பேர் காயம்


நைஜீரியா: பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் உருண்டு விபத்து - 9 பேர் பலி, 5 பேர் காயம்
x
தினத்தந்தி 4 March 2020 11:21 PM GMT (Updated: 4 March 2020 11:21 PM GMT)

நைஜீரியாவின் பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று தாறுமாறாக ஓடி பள்ளத்தில் உருண்ட விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.


* இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சகத்தில் உயர் பதவியில் இருந்த அதிகாரி சர் பிலிப் ருத்னம் பதவியை ராஜினாமா செய்ததற்கு, உள்துறை மந்திரி பிரித்தி பட்டேல் வருத்தம் தெரிவித்துள்ளார். அமைச்சகத்தில் ஒவ்வொருவரின் பணியையும் தான் மதிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

* தென்கொரியாவின் தென்சுங்சியோங் மாகாணத்தின் தென்மேற்கு நகரமான சியோசனில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 36 பேர் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தினால் ஆலையின் அருகில் உள்ள பல வீடுகளும், வணிக வளாக கட்டிடங்களும் சேதம் அடைந்தன.

* நைஜீரியாவின் மேற்கு மாகாணமான குவாராவில் 14 பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி தாறுமாறாக ஓடி பள்ளத்தில் உருண்டது. இதில் 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காயமடைந்த 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* சோமாலியா நாட்டில் அல் சபாப் பயங்கரவாதியான ஈசாக் நிஷோ கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து வெடிகுண்டுகள் பொருத்திய பெல்ட், ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதை அரசு செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் முக்தர் ஒமர் உறுதி செய்தார்.

Next Story