துனிசியா தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே தற்கொலை தாக்குதல்


துனிசியா தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே தற்கொலை தாக்குதல்
x
தினத்தந்தி 6 March 2020 12:16 PM GMT (Updated: 6 March 2020 12:16 PM GMT)

துனிசியா தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

துனிசில்

துனிசியா தலைநகர் துனிசில்  உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே வந்த மர்ம நபர் தன்னை தானே வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளார்.  உடலில் வெடிகுண்டு பெல்ட் கட்டிய படி  மோட்டார் சைக்கிளில் வந்த நபர், அமெரிக்கா தூதரகத்திற்கு செல்லும் சாலையில் இருந்த பாதுகாப்பு ரோந்து வாகனத்தை குறிவைத்து இத்தாக்குதலில் ஈடுபட்டதாக உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

இந்த தாக்குதலில் தீவிரவாதியை தவிர வேறு உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தற்கொலை தாக்குதல் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணையை நடத்தி வருவதாக  தகவல் தெரிவிக்கின்றன.

Next Story