ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்: 3 அமெரிக்க வீரர்கள் பலி


ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்: 3 அமெரிக்க வீரர்கள் பலி
x
தினத்தந்தி 15 March 2020 11:00 PM GMT (Updated: 15 March 2020 11:00 PM GMT)

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே அமெரிக்கா மற்றும் அதன் நாடுகளின் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.


* ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே டாஜி நகரில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நாடுகளின் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்களும், ஈராக்கை சேர்ந்த 2 வீரர்களும் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* இஸ்ரேலில் கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்கு ஒத்திவைத்து அந்த நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

* நியூசிலாந்தில் கடந்த ஆண்டு மார்ச் 15-ந்தேதி 2 மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இந்த கோர சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகளை அந்த நாட்டு அரசு ரத்து செய்தது.

Next Story