ஸ்பெயினில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 514 பேர் பலி


ஸ்பெயினில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 514 பேர் பலி
x
தினத்தந்தி 24 March 2020 7:34 PM GMT (Updated: 24 March 2020 7:34 PM GMT)

ஸ்பெயினில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 514 பேர் பலியாகி உள்ளனர்.

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 514 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,800 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையும் ஒரே நாளில் 6,600 அதிகரித்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ், நெருக்கடி நிலையை மேலும் 2 வாரங்களுக்கு ஏப்ரல் 11-ந் தேதி வரை நீட்டிக்க நாடாளுமன்ற ஒப்புதலை எதிர்நோக்கி உள்ளார். இத்தாலி, சீனாவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது.

அருகில் உள்ள இத்தாலி இப்போது இந்த தொற்றுநோயின் மையமாக உள்ளது. அங்கு 6 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். 65 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story