உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது


உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 31 March 2020 3:13 AM GMT (Updated: 31 March 2020 3:13 AM GMT)

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.

பாரீஸ், 

உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 3,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.

இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி  37,815 பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது.  அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.  சுமார் 1, 65 ஆயிரம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

உலக அளவில் இத்தாலியில்  11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.  ஸ்பெயின் நாட்டில்  7ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் பலியானார்கள். 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,165- ஆக உள்ளது. வைரசின் பிறப்பிடமான சீனாவில் புதிதாக 79 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

 ஈரானில் 2 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.  மொத்த உயிர்ப்பலியில் ஐரோப்பா கண்டத்தில் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.


Next Story