கொரோனா பாதிப்பு; ஸ்பெயினில் ஒரே நாளில் 950 பேர் பலி
ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 950 பேர் பலியாகி உள்ளனர்.
மேட்ரிட்,
சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா 199 நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயின் நாட்டில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 950 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 3 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோன்று பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 238 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 563 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 2,352 ஆக உயர்ந்து உள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளில் பலி எண்ணிக்கை 884 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story