சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு; பிரதமர் அறிவிப்பு


சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு; பிரதமர் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 April 2020 9:05 AM GMT (Updated: 3 April 2020 9:05 AM GMT)

சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக வரும் 7ந்தேதி முதல் அடுத்த 1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அந்நாட்டின் பிரதமர் லீ சீன் லூங் அறிவித்து உள்ளார்.

அதனால் அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளை தவிர்த்து பெருமளவிலான பணியிடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.  1,049 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதிய சமூக இடைவெளி விதிகளை மீறுவோர்கள் மீது 6 மாத சிறை தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராத தொகையும் விதிக்கப்படும்.  அதனால் பொதுமக்கள் அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story