ஈரானில் ஒரே நாளில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஈரானில் இன்று ஒரே நாளில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெஹ்ரான்,
உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 45,60,457 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,04,309 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து 17,23,438 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஈரானிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 2,102 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,16,635 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்னிக்கை 6,902 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 91,836 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 6,58,604 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story