இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 468 பேர் பலி


இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 468 பேர் பலி
x
தினத்தந்தி 16 May 2020 6:12 PM GMT (Updated: 16 May 2020 6:12 PM GMT)

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 468 பேர் உயிரிழந்ததால், அங்கு பலி எண்ணிக்கை 34,466 ஆக உயர்ந்துள்ளது.

லண்டன்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 46,83,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,10,825 பேர் உயிரிழந்துள்ளனர். 

உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 468 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 34,466 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 23 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 2,40,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 1,36,486 பரிசோதனைகள் செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் 78 ஆயிரத்து 537 பேர் இந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதாவது சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story