ரஷியாவில் ஒரே நாளில் 8,600 பேருக்கு கொரோனா தொற்று


ரஷியாவில் ஒரே நாளில் 8,600 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 24 May 2020 9:15 PM GMT (Updated: 24 May 2020 8:02 PM GMT)

ரஷியாவில் ஒரே நாளில் 8,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாஸ்கோ, 

ரஷியாவில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 8,600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்து 481 ஆக உயர்ந்திருக்கிறது.

இதையொட்டி ரஷிய தேசிய கொரோனா பதிலளிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில், “84 பிராந்தியங்களில் மொத்தம் 8,599 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ட்டுள்ளது. 3,777 பேருக்கு மருத்துவ ரீதியில் அறிகுறிகள் இல்லை. புதிதாக பாதிப்புக்கு ஆளானவர்களில் 2,516 பேர் மாஸ்கோவில் பதிவாகி உள்ளனர். ஏப்ரல் இறுதிக்கு பிறகு இதுதான் அங்கு குறைவான எண்ணிக்கை ஆகும்” என கூறப்பட்டுள்ளது.

ரஷியாவில் 24 மணி நேரத்தில் 5,363 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.

Next Story