பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது


பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 2 Jun 2020 12:27 AM GMT (Updated: 2 Jun 2020 12:27 AM GMT)

பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

பிரேசிலியா, 

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. 2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மேலும் புதிதாக 732 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது.


Next Story