கொரோனா தொற்று: பாகிஸ்தானில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தானில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை தற்போது 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 72 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,543 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60 பேர் பலியாகி உள்ளனர். 26 ஆயிரத்து 83 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் இம்ரான்கான் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
Related Tags :
Next Story