அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா


அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 July 2020 2:14 AM GMT (Updated: 3 July 2020 2:14 AM GMT)

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலக நாடுகளில் கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடு அமெரிக்காவே ஆகும்.

அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 56 ஆயிரத்தை கடந்தது. இதனால், மொத்த பாதிப்பு 28,36,875 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 679 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 1,31,477 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பிலிருந்து இதுவரை 11.91 லட்சம் பேர் மீண்டுள்ளனர்; 15.14 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அமெரிக்காவில் கொரோனா படிப்படியாக  அதிகரித்துக்கொண்டே செல்வதால்  அந்நாட்டு மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Next Story