சீனா-இந்தியா மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை- அமெரிக்கா முன்னாள் ஆலோசகர்
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறி உள்ளார்.
வாஷிங்டன்
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியதாவது:
டொனால்டு டிரம்ப் எந்த வழியில் செல்வார் என்று எனக்குத் தெரியாது, அவருக்கும் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. சீனாவுடனான புவிசார் மூலோபாய உறவை அவர் வர்த்தகத்தின் மூலமாக மட்டுமே பார்க்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
வர்த்தகம் முக்கியமானது, ஏனென்றால் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிடமிருந்து அறிவுசார் சொத்துக்களை சீனா திருடியது, பல தசாப்தங்களாக பலமான தொழில்நுட்ப இடமாற்றங்களில் ஈடுபட்டுள்ளது, அது அவர்களின் பொருளாதார வெற்றியின் முக்கிய பகுதியாகும்.
"நவம்பர் தேர்தலுக்குப் பிறகு டிரம்ப் என்ன செய்வார் என்று எனக்குத் தெரியவில்லை. உய்குர்களை வதை முகாம்களில் அடைத்ததற்காக அல்லது ஹாங்காங்கை அடக்குவதற்காக அவர் சீனாவை விமர்சிக்க மாட்டார்.
"நான் உறுதிசெய்கிறேன்,இந்த நேரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல் அதிகரித்தால், டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராக இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை?
எல்லை மோதலின் முக்கியத்துவத்தை அவர் எவ்வளவு புரிந்துகொள்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த மோதல்களின் வரலாறு பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று நான் நினைக்கவில்லை என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story