மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று


மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 14 July 2020 9:15 PM GMT (Updated: 14 July 2020 7:43 PM GMT)

மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டது.

மெக்சிகோ,

* மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்து 491 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.

*ஆப்பிரிக்க நாடான கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று பெண்கள் குழந்தைகள் உட்பட 63 பேரை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவின் போர்ட் விலா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ஜப்பானின் தென்மேற்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story