உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்குகிறது


உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 23 July 2020 2:32 AM GMT (Updated: 23 July 2020 2:32 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

ஜெனிவா,

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டிய போதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 53 லட்சத்து 64 ஆயிரத்து 925 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு தற்போது வரை 6 லட்சத்து 29 ஆயிரத்து 339 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் கொரோனாவில் இருந்து 93 லட்சத்து 43 ஆயிரத்து 736 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 

வைரஸ் பரவியவர்களில் 53 லட்சத்து 91 ஆயிரத்து 736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 174 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 1,46,183
பிரேசில் - 82,890
இங்கிலாந்து - 45,501
மெக்சிகோ - 40,400
இத்தாலி - 35,082
பிரான்ஸ் - 30,172
இந்தியா -  28,732
ஸ்பெயின் - 28,426

Next Story