ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் பலி
x
தினத்தந்தி 31 July 2020 7:34 AM GMT (Updated: 31 July 2020 7:34 AM GMT)

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லபட்டனர்.

காபூல்

ஆப்கானிஸ்தானில் லோகர் மாகாணத்தில் கவர்னர் அலுவலகத்திற்கு அருகிலும், பக்ரீத் பண்டிகைக்கு ஏராளமானோர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த இடத்திலும் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது.

பக்ரீத் பண்டிகையின்போது தலிபான்கள் அறிவித்த போர்நிறுத்தத்தின் போது இந்த ச் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க தலிபான்கள் மறுத்துள்ளனர், அதே நேரத்தில் ஐ.எஸ் அமைப்பும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸாபிஹுல்லா முஜாஹித், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உள்ளார்.

பக்ரீத் பண்டிகை இரவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தி நம் நாட்டு மக்களைக் கொன்றனர் என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் கூறினார்.


Next Story