அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை - அதிபர் டிரம்ப்


அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை - அதிபர் டிரம்ப்
x
தினத்தந்தி 31 July 2020 1:38 PM GMT (Updated: 31 July 2020 1:38 PM GMT)

அதிபர் தேர்தலை ஒத்திவைக்க தான் விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

கொரோனா தொற்று பரவல் காரணமாக மிக மோசமாக பாதிப்பட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறை களம் காணும் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார்.

இதனிடையே மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க இயலும்வரை அதிபர் தேர்தலை தள்ளி வைக்கலாமே?” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், “கொரோனா தொற்றின் காரணமாக தபால் ஒட்டு முறை பயன்படுத்தப்பட்டால், அதன் காரணமாக தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரவும் வாய்ப்புள்ளது. அப்படி ஒரு தேர்தல் நடந்தால் அதுதான் வரலாற்றிலேயே மோசமான தேர்தலாக அமையும். அந்நிய நாடுகள் இந்த முறையின் காரணமாக தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புகள் அதிகம்.

அத்துடன் தபால் ஒட்டுமுறை இதற்கு முன்பு முயற்சி செய்யப்பட்ட இடங்களில் பெரும் கஷ்டமாக முடிந்துள்ளது. அப்படி நடந்தால் அமெரிக்காவிற்கும் அது மிக அவமானகரமானதாக அமையும். மக்கள் முறையாக, சரியாக மற்றும் பாதுகாப்பாக வாக்களிக்க முடியும் வரை அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம்” என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனே பின்வாங்கினார். 

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அமெரிக்க அதிபர் தேர்தலை நான் ஒத்திவைக்க விரும்பவில்லை, தேர்தலை நடத்தவே விரும்புகிறேன். ஆனால் நான் மூன்று மாதங்கள் காத்திருக்க விரும்பவில்லை. மின்னஞ்சல் வாக்குகளை எண்ணி முடிக்க பல வாரங்கள், மாதங்கள் ஆகும் என்பதால், அதுவரை காத்திருக்க நான் விரும்பவில்லை” என்று கூறினார்.

Next Story