கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பீதியடைந்த மக்கள் வீடுகளில் தஞ்சம்


கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பீதியடைந்த மக்கள் வீடுகளில் தஞ்சம்
x
தினத்தந்தி 7 Aug 2020 10:14 PM GMT (Updated: 7 Aug 2020 10:14 PM GMT)

கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்பீதியடைந்த மக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஒட்டாவா, 

கனடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரின்ஸ் எட்வேர்ட் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாண தலைநகர் சார்லோட்டவுனை மையமாக கொண்டு தாக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சார்லோட்டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. அதேபோல் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.

Next Story