இலங்கை கடலில் தீப்பிடித்து எரியும் கப்பலில் தீ கட்டுக்குள் வருகிறது
தீ விபத்துக்கு உள்ளான எம் டி டைமண்ட் கப்பல் 35 நாட்டிக்கல் மைல்கள் வெற்றிகரமாக இழுத்து வரப்பட்டது.
கொழும்பு,
பனாமா நாட்டுக்கு சொந்தமான 'நியூ டைமண்ட்' என்ற கப்பல், கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு பயணித்தது. அதில் மாலுமி பொறியாளர்கள் உள்பட 23 ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில், அம்பாறை சங்கமன்கந்தை பகுதியின் கிழக்கு கடல் பகுதியில் அந்தக் கப்பல் தீப்பிடித்தது. கப்பலில் பயணம் செய்த 23 ஊழியர்களில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார்.
சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் பேரல்களுடன் எரிவதை அணைக்க ரஷ்ய போர்க்கப்பல் களமிறங்கியது. இலங்கையும் போராடி வரும் நிலையில் இந்தியா தனது கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா என 3 கப்பல்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. கப்பலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் 6 கடற்படை கப்பல்களும், 2 விமானங்களும் ஈடுபட்டன.
தீ விபத்துக்கு உள்ளான எம் டி டைமண்ட் கப்பல் 35 நாட்டிக்கல் மைல்கள் வெற்றிகரமாக இழுத்து வரப்பட்டது. கடலின் நீர் மட்டத்தில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது தீயின் வேகம் தணிந்துள்ளது. எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story