3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - டொனால்டு டிரம்ப்
இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியாக அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்
பிலடெலபியாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசும் போது கூறியதாவது:-
பேசுகையில், கொரோனா தடுப்பு மருந்தை நெருங்கிவிட்டோம். முந்தைய அரசாக இருந்தால் தடுப்பு மருந்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வர பல ஆண்டுகாலம் எடுத்திருக்கும்.
ஆனால், தன்னுடைய அரசு இன்னும் சில வாரங்களில் தடுப்பூசியை அறிமுகம் செய்ய உள்ளது.இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story