விண்வெளி இப்போது உலகளாவிய மோதலின் இறுதி எல்லையாக உள்ளது-இங்கிலாந்து விமானப்படைத் தலைவர்


விண்வெளி இப்போது உலகளாவிய மோதலின் இறுதி எல்லையாக உள்ளது-இங்கிலாந்து விமானப்படைத் தலைவர்
x
தினத்தந்தி 17 Sep 2020 7:25 AM GMT (Updated: 17 Sep 2020 7:25 AM GMT)

விண்வெளியில் நடக்கும் ஆயுத போட்டி பேரழிவில் முடியக்கூடும் என்று இங்கிலாந்து விமானப்படைத் தலைவர் மார்ஷல் மைக் விக்ஸ்டன் எச்சரித்துள்ளார்.

லண்டன்

இங்கிலாந்து விமானப்படை தலைவர் மார்ஷல் மைக் விக்ஸ்டன் கூறியதாவது:-

விண்வெளி இப்போது போட்டியிடும் போர்-சண்டைக் களமாக மாறியுள்ளது. சாத்தியமான வான், பாலிஸ்டிக் மற்றும் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை இங்கிலாந்து இனி புறக்கணிக்க முடியாது.

கடந்த மூன்று தசாப்தங்களாக நமது வான் அல்லது விண்வெளியை யாரும் அணுகாத நிலையில் இனியும் யாரும் அணுகமாட்டார்கள் என நாம் எடுத்துக்கொள்ள முடியாது. வான், பாலிஸ்டிக் மற்றும் ஏவுகணை தாக்குதலை நாம் புறக்கணிக்க முடியாது.

இங்கிலாந்தின் விண்வெளி அணுகல் அதன் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும், பிரிட்டிஷ் செயற்கைக்கோள் சேவைகளுக்கு ஏதேனும் இழப்பு அல்லது இடையூறு ஏற்பட்டால் அது அன்றாட வாழ்க்கையில் பேரழிவு விளைவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

Next Story