உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 19 Sep 2020 10:15 PM GMT (Updated: 19 Sep 2020 8:16 PM GMT)

பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

* ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில் போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த மோதலில் 3 போலீசாரும், பயங்கரவாதிகள் 3 பேரும் பலியாகினர். அதே போல் தாக்கர் மாகாணத்தில் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த மோதலில் 2 ராணுவ வீரர்களும் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

* பாப்புவா நியூ கினியாவின் வடக்கு பகுதியிலுள்ள லே நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் இல்லை.

* ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் சந்தித்து பேச உள்ளார்.

* பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 858 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 793 ஆக அதிகரித்துள்ளது.

* நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் போகோஹரம் பயங்கரவாதிகள் 16 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 38 பேர் படுகாயம் அடைந்தனர்.

* பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 5 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.

Next Story