சுட்டுக்கொல்லபட்ட வேற்று கிரகவாசி மறைக்கபட்ட உடல்; அமெரிக்க விமானப்படை மேஜரின் அனுபவம்


சுட்டுக்கொல்லபட்ட வேற்று கிரகவாசி மறைக்கபட்ட உடல்; அமெரிக்க விமானப்படை மேஜரின் அனுபவம்
x
தினத்தந்தி 22 Sep 2020 4:17 PM GMT (Updated: 22 Sep 2020 4:17 PM GMT)

சுட்டுக்கொல்லபட்ட வேற்று கிரகவாசி மறைக்கபட்ட உடல்; அமெரிக்க விமானப்படை மேஜரின் அனுபவம் 1978 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு அருகில் விண்வெளி ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்டது என முன்னாள் அமெரிக்க விமானப்படை மேஜர் ஜார்ஜ் ஃபில்லர் கூறியுள்ளார்.

வாஷிங்டன்

விருது பெற்ற புலனாய்வு நிருபர் ஜான் எல். குரேரா எழுதிய ஒரு விமானப்படை புலனாய்வு அதிகாரியின் உண்மைக்கதை (Strange Craft: The True Story of an Air Force Intelligen வேற்றுகிரகவாசி குறித்துவிவரித்துள்ளார்.

புத்தகத்தில் அவர் 1978 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி, டிக்ஸ் கோட்டையில் ஏலியன் ஒன்று சுடப்பட்டு, மெகுவேர் விமானப்படை தளத்தின் ஓடுபாதை முடிவில் கண்டுபிடித்தாக மூத்த மாஸ்டர் சார்ஜென்ட் ஃபில்லரிடம் கூறியுள்ளார்.

இது வேறொரு கிரகத்தை சேர்ந்த ஏலியனா? என்று பில்லர் கேட்டுள்ளார். இல்லை, அது விண்வெளியில் இருந்து வந்தது, ஒரு விண்வெளி வேற்றுகிரகவாசி என மூத்த மாஸ்டர் சார்ஜென்ட் பதிலளித்துள்ளார். வேற்றுகிரகவாசி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், UFO-க்கள் பைத்தியம் பிடித்த போல் சுற்றி ஒலிக்கத் தொடங்கினர் என்று பில்லர் அதிகாரியிடம் கூறினார்.

ஃபில்லரின் கூற்றுப்படி, தனது காரின் அருகே மெல்லிய மற்றும் சாம்பல்-பழுப்பு நிற உயிரினத்தை கண்ட போலீஸ் அதிகாரி  அதனை சுட்டுக் கொன்று உள்ளார்.அந்த போலீஸ் அதிகாரி வேற்றுகிரகவாசியை கையை உயர்த்தி அசையாமல் நிற்குமாறு கோரியுள்ளார், இதை கேட்க மறுத்ததா அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அந்த போலீஸ் அதிகாரி மெகுவேர் விமானப்படை தளத்தைத் தொடர்பு கொண்டதை அடுத்து​​ஒரு சிறப்பு குழு சம்பவ இடத்திற்கு வந்து வேற்றுகிரகவாசியின் உடலை ஓஹியோவில் உள்ள ரைட்-பேட்டர்சன் விமானப்படை தளத்திற்கு கொண்டு சென்றது.

உளவுத்துறை அறிக்கைக்காக சாட்சிகளுடன் பேசவும் சம்பவத்தின் புகைப்படங்களைப் பார்க்கவும் கோரிக்கையை தாக்கல் செய்ததாக பில்லர் கூறுகிறார், ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story