மதுபானம் கொடுத்து 50 பெண்கள் பாலியல் வன் கொடுமை; கருவுற்ற பெண்கள்
மதுபானம் கொடுத்து 50 பெண்கள் -உதவிப் பணியாளர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் உறுதி கொடுத்துள்ளது.
வாஷிங்டன்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வெடிப்பைச் சமாளிக்க நியமிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதியளித்துள்ளது.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் மீது 50 பெண்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
பெண்களுக்கு மதுபானம் கொடுத்து மருத்துவமனையில் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக இரண்டு பெண்கள் கர்ப்பமாகி உள்ளனர். 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தாண்டு வரை இப்படியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நியூ ஹுமானிடேரியன் செய்தி நிறுவனம்மற்றும் தாம்ப்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் ஆகியவை இது தொடர்பாக கடந்த ஓராண்டாக விசாரித்து வருகின்றன. இது தொடர்பாக உறுதியான விசாரணை நடைபெறும் என உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.
Related Tags :
Next Story