பிரான்சு தலைநகர் பாரிஸில் திடீரென எழுந்த பெரும் சத்தத்தால் பதற்றம்


பிரான்சு தலைநகர் பாரிஸில் திடீரென எழுந்த பெரும் சத்தத்தால் பதற்றம்
x
தினத்தந்தி 30 Sep 2020 10:38 AM GMT (Updated: 30 Sep 2020 10:38 AM GMT)

பிரான்சு தலைநகர் பாரிசில் திடீரென எழுந்த பெரும் சத்தத்தால் அங்குள்ள மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.

பாரிஸ்,

பிரான்சு தலைநகர் பாரிஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பெரும் சத்தம் கேட்டதால்  அங்குள்ள மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட சத்தம் காரணமாக பிரான்சு ஒபன் டென்னிஸ் போட்டியும் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. 

பாரிஸ் முழுவதும் இந்த சத்தம் கேட்டதால்,. சமூக வலைத்தளங்களில் இந்த சத்தம் எழுந்தது பற்றிய பதிவுகளை பலர் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில்,  சூப்பர் சோனிக் போர்  விமானம் பறந்து சென்றதால் ஏற்பட்ட சத்தம் என பாரிஸ் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.  


Next Story