உலக மக்கள் தொகையில் 10% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்- உலக சுகாதார அமைப்பு
உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா,
உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவா் மைக்கேல் ரையன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக உலக சுகாதார அமைப்பின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவா் கூறியதாவது:- கொரோனா தொற்று பரவல் தொடா்ந்து விரிவடையும். எனினும் அந்தத் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தவும், உயிா்களை காக்கவும் வழிகள் உள்ளன. இதுவரை பலா் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல உயிா்களை காப்பாற்ற முடியும்.
தற்போதைய மதிப்பீட்டின்படி, உலக மக்கள்தொகையில் சுமாா் 10% பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தொற்று தொடா்ந்து பரவி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. தெற்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது” என்றார்
Related Tags :
Next Story