டொனால்டு டிரம்ப் தான் கொரோனா சிகிச்சையைப் பெற்ற 'உலகின் முதல் நோயாளி'


டொனால்டு டிரம்ப் தான் கொரோனா சிகிச்சையைப் பெற்ற உலகின் முதல் நோயாளி
x
தினத்தந்தி 6 Oct 2020 6:51 AM GMT (Updated: 6 Oct 2020 6:51 AM GMT)

கொரோனா சிகிச்சையைப் பெற்ற 'உலகின் முதல் மற்றும் ஒரே நோயாளி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான்

வாஷிங்டன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு திரும்பி உள்ளார்.

வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில்  உள்ள ஸ்டேட்லே பால்கனிக்கு வந்த டிரம்ப்,   புகைப்படத்திற்கு தம்ஸ் அப் காட்டினார். அப்போது, மாஸ்க்கை கழற்றி தனது பாக்கெட்டில் டிரம்ப் வைத்துக்கொண்டார்.  மேலும், கொரோனா வைரசைக் கண்டு அமெரிக்கர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் டிரம்ப் கூறினார். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது மிக அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தும் வகையில்,  தொற்று பாதித்த டிரம்ப் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருந்தது  சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட உயிரையும் அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் காவு வாங்கியுள்ள கொரோனாவை டிரம்ப்  குறைத்து மதிப்பிடுவது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

தற்போது தமது கொரோனா குறித்து பயம் இல்லை எனவும், இன்றே தாம் வெள்ளை மாளிகைக்கு திரும்ப உள்ளதாகவும் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கொரோனா தொற்று கண்டு பயப்பட வேண்டாம் எனவும், அதை உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நாம் அளப்பரிய அறிவையும் சிறந்த மருந்துகளை உருவாக்கியுள்ளோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தாம் சிறப்பாக உணர்வதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரி ஒருவர், ஜனாதிபதி டிரம்ப், விரைவாக குணமடைந்து வருவதாகவும், சாதாரண நிலைக்கு அவர் மிக விரைவில் திரும்புவதுடன் அன்றாட பணிகளிலும் ஈடுபடுவார் என தெரிவித்திருந்தார்.

டிரம்ப் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, ரெஜெனெரானின் சோதனை ஆன்டிபாடி சிகிச்சையைப் பெற்றார் - இது கொரோனா வைரஸின் அளவைக் குறைக்கலாம் மற்றும் 275 நோயாளிகள் சம்பந்தப்பட்ட ஒரு சோதனையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் இது காட்டியுள்ளது.

ஆனால் சிகிச்சைக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் இருந்து அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. டிரம்பின் மருத்துவர்களிடமிருந்து "கருணை பயன்பாடு" கோரிக்கையைப் பெற்ற பின்னர் இந்த மருந்தை வழங்கியதாக பயோடெக் நிறுவனம் ரெஜெனெரான் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மக்களுக்கு, "கருணை பயன்பாட்டுக் கோரிக்கையின் மூலம் இன்னும் அங்கீகரிக்கப்படாத மருந்துகளை அணுகுவது நீண்ட மற்றும் சவாலான செயல்முறையாக இருக்கும்" என்று மாயோ கிளினிக் கூறியது, 

சோதனை ஆன்டிபாடி சிகிச்சைக்கு கூடுதலாக, டிரம்பிற்கு ரெம்டெசிவிர் மற்றும் டெக்ஸாமெதாசோன் வழங்கப்பட்டது.

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜொனாதன் ரெய்னர் கூறுகையில், "இந்த குறிப்பிட்ட மருந்துகளைப் பெறும் ஒரே நோயாளி ஜனாதிபதி மட்டுமே.

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மைய  ஒப்புதல் பெறவில்லை, ஆனால் அது நிறுவனத்திடமிருந்து அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

சோதனையில் இறுதி கட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சைக்கான 3 மருந்துகள் டொனால்டு டிரம்புக்கு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.


Next Story