கொரோனாவை பரப்பியதற்காக சீன மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் டொனால்டு டிரம்ப் மிரட்டல்


கொரோனாவை பரப்பியதற்காக சீன மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் டொனால்டு டிரம்ப் மிரட்டல்
x
தினத்தந்தி 8 Oct 2020 11:23 AM GMT (Updated: 8 Oct 2020 11:23 AM GMT)

கொரோனாவை பரப்பியதற்காக சீன மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.

வாஷிங்டன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனா கொரோனா வைரஸை பரப்பியதற்கு மிக பெரிய விலை' கொடுக்கு வேண்டியிருக்கும் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் உதவியாளர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர். பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக டிரம்ப் மட்டும் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையிலிருந்து நான்கு நாட்களுக்கு பின்னர் வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்ப் டிவிட்டரில் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில் கொரோனா தொற்றை உலகம் முழுவதும் பரப்பியதற்காக சீனாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இது நடந்தது உங்கள் தவறு அல்ல, இது சீனாவின் தவறு. மேலும் இந்த நாட்டிற்கும் உலகத்திற்கும் அவர்கள் செய்ததற்கா அந்நாடு மிக பெரிய விலை' கொடுக்கு வேண்டியிருக்கும். இந்த தொற்று பாதிப்பு சீனாவின் தவறு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.” என டிரம்ப் டிவிட்டரில் தான் வெளியிட்ட காணொளி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அமெரிக்காவில் தொற்றினை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எவ்வித தகவல்களையும் இந்த காணொளியில் அவர் குறிப்பிடவில்லை. தவிர்த்து சீனா மீது தொடர் குற்றச்சாட்டுகளையும், அந்நாட்டிலிருந்து வருபவர்களுக்கான விசா கட்டுப்பாட்டினையும் மேற்கொண்டுள்ளது.

மேலும் சீனாவுக்கு எதிராக ஆசிய நாடுகளையும் ஒருங்கிணைக்கும் செயலின் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை நேற்று சந்தித்திருந்தார்.


Next Story