உலகைச் சுற்றி....


உலகைச் சுற்றி....
x
தினத்தந்தி 9 Oct 2020 10:14 PM GMT (Updated: 9 Oct 2020 10:14 PM GMT)

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 729 பேர் கொரோனாவுக்கு பலியானதால், அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

* அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தின் ஆளுநரும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான கிரெட்சன் விட்மேனை கடத்தும் சதித்திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

* தாய்லாந்தின் தெற்குப்பகுதியில் உள்ள பட்டானி மாகாணத்தில் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பாக சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு குண்டு வெடிப்பையும் நிகழ்த்தினர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட நிலையில் மேலும் 2 போலீசார் படுகாயமடைந்தனர்.

* ரஷியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

* பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 729 பேர் கொரோனாவுக்கு பலியானதால், அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதேபோல் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்துள்ளது.

* ஈரான் மீது அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷாரீப் சீனாவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 5,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.

Next Story