இந்தியா,அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும், டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இஸ்லாமாபாத்
ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான வீடியோக்கள் பகிரப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, சீன செயலியான டிக்டாக்கிற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
சட்டவிரோத ஆன்லைன் பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான வழிமுறைகளை, முழுமையாக பின்பற்ற டிக்டாக் நிர்வாகம் தவறிவிட்டதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து, சீனாவின் நேச நாடான பாகிஸ்தானும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவது குறித்து வரும் மார்ச் மாத இறுதிக்குள் பிசிசிஐ நடவடிக்கை எடுக்காவிட்டால், 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியை இந்தியாவிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் வலியுறுத்துவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மானி தெரிவித்துள்ளார்.