பாகிஸ்தானில் அரசாங்க எதிர்ப்பு பேரணிக்கு முன்னதாக 450 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது வழக்கு


பாகிஸ்தானில் அரசாங்க எதிர்ப்பு பேரணிக்கு முன்னதாக  450 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Oct 2020 11:42 AM GMT (Updated: 15 Oct 2020 11:42 AM GMT)

பாகிஸ்தானில் அரசாங்க எதிர்ப்பு பேரணிக்கு முன்னதாக 450 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டின் 11 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பி.டி.ஐ அரசாங்கத்திற்கு எதிராக முதல் பிரச்சார கூட்டம் நாளை தொடங்க உள்ளது.

முதல் அரசாங்க எதிர்ப்பு பேரணி லாகூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள குஜ்ரான்வாலா நகரில் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து அக்டோபர் 18 அன்று கராச்சியில், அக்டோபர் 25 ஆம் தேதி குவெட்டாவில், நவம்பர் 22 அன்று பெஷாவர், நவம்பர் 30 அன்று முல்தான், பின்னர் ஒரு பேரணி டிசம்பர் 13 அன்று லாகூரில் நடைபெறும்.

இந்த நிலையில்பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான  முதல் மாபெரும் பேரணிக்கு முன்னதாக பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 450 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது லாகூர் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் பிற பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20 அன்று, 11 முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) அமைப்பதாகவும், மூன்று கட்ட அரசு எதிர்ப்பு இயக்கத்தை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளுடன் தொடங்கி ஒரு செயல் திட்டத்தின் கீழ் தொடங்குவதாகவும் அறிவித்தனர். ஜனவரி 2021 இல் இஸ்லாமாபாத்தை நோக்கி நீண்ட அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது.

நாட்டின் சமீபத்திய வரலாற்றில் முதல் முறையாக அரசியல் மற்றும் தேர்தல்களில் இராணுவம் தலையிடுவதை எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக எதிர்க்கின்றன.


Next Story