வடகொரியாவின் ஏவுகணை உலக பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் - பென்டகன் எச்சரிக்கை


வடகொரியாவின் ஏவுகணை உலக பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் - பென்டகன்  எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2020 12:01 PM GMT (Updated: 15 Oct 2020 12:01 PM GMT)

வடகொரியாவின் ஏவுகணை உலக பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்

சில தினங்களுக்கு முன்னர் வட கொரியாவின் ஆளும் கட்சியின் ஆண்டு விழாவினையொட்டி, ராணுவ அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் அதிநவீன ஹவாசாங் -16 என்ற புதிய ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியது. 

இந்நிலையில், பென்டகனில் தென் கொரிய பாதுகாப்பு மந்திரி சு வூக்குடனான சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு பேசிய எஸ்பர், வட கொரியாவின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் பிராந்தியத்தின் மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். கொரிய நாடுகளின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உடனான தனது உறவைப் பற்றி கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெற்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளின் செலவில் பெரும் பங்கை தென்கொரியா செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தென் கொரியாவில் சுமார் 28,500 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, இது வட கொரியாவுக்கு ஒரு தடுப்பாகக் கருதப்படுகிறது. இது ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கு மற்றும் திறனைப் பற்றி சீனாவிற்கு மறைமுகமாக சவால் விடுக்கின்றது.

தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சு ஹூனும் இந்த வாரம் வாஷிங்டனில் தனது அமெரிக்காவுடன் அறிவிக்கப்படாத சந்திப்புகளுக்காக சென்றுள்ளார் என்று தென் கொரியாவின் ஜனாதிபதி அலுவலகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.


Next Story