அடுத்த விவாதத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்வேன்: டிரம்ப்
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருப்பதால் இதற்கான பிரசாரமும் அனல் பறந்து வருகிறது.
வாஷிங்டன்,
கடந்த 1-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆனால், டிரம்ப்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேரிலாண்ட் மாகாணம் பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருப்பதால் இதற்கான பிரசாரமும் அனல் பறந்து வருகிறது. அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர் நேருக்கு நேர் விவாதம் நடைபெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல் விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் நடந்த நிலையில் 2-வது விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்த மெய்நிகர் முறையில் நடத்த திட்டமிட்டதால் இந்த விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என டிரம்ப் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், வரும் வியாழக்கிழமை ஜோ பிடன் -டிரம்ப் நேருக்கு நேர் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்வததற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொள்வேன் என டிரம்ப் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story