சீனாவிலிருந்து வரும் மஞ்சள் தூசி கொரோனா வைரசை கொண்டுவரும் வட கொரியா எச்சரிக்கை


சீனாவிலிருந்து வரும் மஞ்சள் தூசி கொரோனா வைரசை கொண்டுவரும் வட கொரியா எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2020 8:33 AM GMT (Updated: 23 Oct 2020 8:33 AM GMT)

சீனாவிலிருந்து வரும் மஞ்சள் தூசி காற்று கொரோனா வைரசை கொண்டுவரக்கூடும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பியோங்யாங்

சீனாவிலிருந்து வீசும் "மஞ்சள் தூசி" காற்று கொரோனா வைரஸைக் கொண்டு வரக்கூடும் என்ற அச்சத்தில் வட கொரியா தனது குடிமக்களை வீட்டுக்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தலைநகர் பியோங்யாங்கின் வீதிகள் வியாழக்கிழமை கிட்டத்தட்ட காலியாக இருந்தன

வட கொரிய அரசு  நாட்டில் கொரோனா வைரஸ் இல்லைஎன்று கூறுகிறது, ஆனால் ஜனவரி முதல் கடுமையான எல்லை மூடல்கள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

பருவகால தூசி மேகங்களுக்கும் கோவிட் -19 க்கும் எந்த தொடர்பும் இல்லை. இருப்பினும்,  குடிமக்கள் முககவசம் அணியுமாறும், வீதிகளில் நடமாட வேண்டாம் என்றும் வடகொரிய அரசு கேட்டு கொண்டுள்ளது.

அரசு கட்டுப்பாட்டில் உள்ள கொரிய மத்திய தொலைக்காட்சி (கே.சி.டி.வி)  சிறப்பு வானிலை செய்திகளை ஒளிபரப்பியது, அப்போது மஞ்சள் தூசி வருவதை எச்சரித்தது. மேலும் இது வெளிப்புற கட்டுமான பணிகளுக்கு நாடு தழுவிய தடையை அறிவித்தது.

மஞ்சள் தூசி என்பது மங்கோலிய மற்றும் சீன பாலைவனங்களிலிருந்து வரும் மணல்காற்றை குறிக்கிறது, அவை ஆண்டின் சில நேரங்களில் வடக்கு மற்றும் தென் கொரியாவில் வீசுகின்றன. இது நச்சு தூசியுடன் ஒன்றிணைந்துள்ளது, பல ஆண்டுகளாக இரு நாடுகளிலும் சுகாதார கவலைகளை எழுப்பியுள்ளது.


Next Story