கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்; ஆய்வு முடிவு


கொரோனா பாதிப்பு:  அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்; ஆய்வு முடிவு
x
தினத்தந்தி 23 Oct 2020 7:17 PM GMT (Updated: 23 Oct 2020 7:17 PM GMT)

அமெரிக்காவில் ஒவ்வொருவரும் முக கவசங்கள் அணிவதன் வழியே 1.3 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.

லண்டன்,

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளால் வருகிற பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட கூடும் என்று ஆய்வு மதிப்பீடு ஒன்ற தெரிவிக்கிறது.

அமெரிக்கா வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை.  அந்நாட்டில் அதிக கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை உள்ளது.  இதனால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உலக அளவில்  முதல் இடம் பிடித்து உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தொற்றை கையாண்ட விதம் வருகிற அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.  இதுவரை அந்நாட்டில் 2.21 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால், அமெரிக்கர்களில் பலர் கொரோனா நெருக்கடியை கையாள்வதில் டிரம்பிற்கு பதிலாக பைடம் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  எனினும், இதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், குறைந்த அளவிலான கொரோனா திறன் சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு மருந்துகளில்லா நிலையில், குளிர்காலத்தில் பொது சுகாதாரத்திற்கு சவாலாக தொடரும் கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டும்.

பெரிய அளவில் பாதிப்புகள் சரிவை நோக்கி சென்றாலும், குளிர்காலத்தில் உயரும் நிலை ஏற்படும்.  தொற்று விகிதம் மற்றும் மரணங்கள் ஆகியவற்றின் உயர்வு காணப்படும் சூழலில், கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதில் அடிப்படை இல்லை.  அது உண்மை என நாங்கள் நம்பவுமில்லை.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட கூடும்.  ஆனால் ஒவ்வொருவரும் முக கவசங்கள் அணிவதன் வழியே 1.3 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.

Next Story