160 பெண்கள் பாலியல் கொடுமை குற்றவாளி சிக்கினான்


160 பெண்கள் பாலியல் கொடுமை  குற்றவாளி சிக்கினான்
x
தினத்தந்தி 24 Oct 2020 8:38 AM GMT (Updated: 24 Oct 2020 8:38 AM GMT)

இளம் பெண்கள் மீதான தாக்குதல் உட்பட 160 பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இத்தாலிய நபரை ஜெர்மன் எல்லையில் பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாரிஸ்

160 வயது பாலியல் பலாத்காரங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை செய்ததாக 52 வயது உடைய இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர்.

ஜெர்மன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அக்டோபர் 7 ஆம் தேதி பிரான்ஸ் போலீசாருக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.மேலும், அவர் கிழக்கு பிரான்சில் அல்சேஸில் குடியேற திட்டமிட்டு எல்லையைத் தாண்டியுள்ளார் என்ற தகவலையும் அளித்துள்ளனர். இதனையடுத்து அதிரடி நடவடிக்கையில் களமிறங்கிய பிரான்ஸ் போலீசார் அக்டோபர் 16 ஆம் தேதி அந்த நபரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் அவர் ஜெர்மனியிடம் ஒப்படைக்கப்படுகிறார்.

முதல் கட்ட விசாரணையில் கடந்த 2000 முதல் 2014 வரையான காலகட்டத்தில் பெண்கள் மற்றும் சிறார் மீதான வன்கொடுமை புகார் தொடர்பாக  போலீசார் அந்த நபரை தேடி வந்துள்ளனர். ஜெர்மனி அதிகாரிகளும் அந்த நபர் மீது 122 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு வழக்குகள் அந்த நபர் மீது பதிவு செய்ய்ப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக சொந்த மகளையே அந்த நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதை பிரான்ஸ் போலீசார் உறுதி செய்துள்ளனர்.


Next Story