போலந்து அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
போலந்து நாட்டு அதிபர் ஆண்டிரெஜ் துதாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வார்சா,
போலந்து நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் மத்தியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது தொடர்ந்து அந்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
போலந்தில் இதுவரை மொத்தம் 2,41,946 பேருக்கு பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளன. 4,351 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சமீபத்திய உயிரிழப்பு உயர்வால் கடந்த 10ந்தேதி முதல் அந்நாட்டில் முக கவசங்களை அணிவது மீண்டும் பரவலாக கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. நிறுவனங்களில் பணிபுரிவதில் கட்டுப்பாடுகள் விதிப்பு, பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் விடுமுறைகளை குடும்பத்துடன் செலவிடுவது ஆகியவற்றை நிறுத்தி வைப்பது போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், போலந்து அதிபர் ஆண்டிரெஜ் துதாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அதிபருக்கான செய்தி தொடர்பு அதிகாரி பிளாஜெஜ் ஸ்பைசால்ஸ்கி தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
எனினும், அதிபர் நலமுடனேயே உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story