கொரோனா தொற்று; கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் கடந்த பலி எண்ணிக்கை
உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்,
உலகம் முழுவதும் கொரோனா வைரசின் அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், குளிர்காலத்தில் கொரோனா வைரசின் 2வது அலை பாதிப்பு ஏற்படுத்த கூடும் என நிபுணர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2வது அலை பாதிப்பு ஏற்படுத்த தொடங்கி விட்டது. இந்த சூழலில் உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 10 ஆக பதிவாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இதுவரை, நாளொன்றுக்கு 10 ஆயிரம் என்ற பலி எண்ணிக்கையை முதன்முறையாக கடந்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story