கொரோனா பாதிப்பால் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் காலமானார்


கொரோனா பாதிப்பால் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் காலமானார்
x
தினத்தந்தி 24 Nov 2020 4:26 AM GMT (Updated: 24 Nov 2020 4:33 AM GMT)

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஜோகன்னஸ்பர்க்,

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும், மணிலால் காந்தியின் பேரனுமான சதீஷ் துபேலியா காலமானார். அவருக்கு வயது 66. தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரில் அவர் வசித்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு, நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் இருக்கும்போது அவரை கொரோனா வைரசும் தாக்கியது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. தனது பிறந்தநாள் முடிந்த 3 நாட்களில் அவர் இறந்துள்ளார். 

இத்தகவலை அவருடைய சகோதரி உமா துபேலியா மேஸ்திரி உறுதி செய்தார். சதீஷ் துபேலியாவுக்கு கீர்த்தி மேனன் என்ற மற்றொரு சகோதரியும் உள்ளார். அவரும் ஜோகன்னஸ்பர்க்கில் வசித்து வருகிறார். மறைந்த சதீஷ் துபேலியா, நீண்ட காலமாக ஊடக புகைப்பட நிபுணராக வேலை பார்த்து வந்தார். தென்னாப்பிரிக்காவில் பல்வேறு சமூகநல அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டு உதவி செய்து வந்தார்.

Next Story