ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் கொன்று குவிப்பு


ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2020 1:24 AM GMT (Updated: 6 Dec 2020 1:24 AM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

காபூல், 

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் வெளிநாட்டு படைகளின் உதவியோடு கிழக்கு மாகாணமான நங்கார்ஹரில் உள்ள கோக்யானி என்ற மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகளை குறிவைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர். இதில் தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பல பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.

Next Story