வாஷிங்டனில் அடுத்த ஆண்டு மார்ச் 31ந்தேதி வரை பொது சுகாதார நெருக்கடி நிலை நீட்டிப்பு
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் அவசரநிலை மற்றும் பொது சுகாதார நெருக்கடி நிலை அடுத்த ஆண்டு மார்ச் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்,
உலக நாடுகளுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசை பெருந்தொற்று என கடந்த மார்ச் 11ந்தேதி உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு இன்று வரை, 16.7 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். 7.56 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவற்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 1.74 கோடி பேர் பாதிக்கப்பட்டும், 3.13 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகர மேயர் முரியல் பவுசர் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வாஷிங்டன் டி.சி. நகரில் வருகிற 23ந்தேதி இரவு 10 மணியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 15ந்தேதி காலை 5 மணிவரை பல்வேறு நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடை விதித்து மேயர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதேபோன்று, நகரில் அவசரநிலை மற்றும் பொது சுகாதார நெருக்கடி நிலை வரும் 2021ம் ஆண்டு மார்ச் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story