மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,370 பேருக்கு கொரோனா


மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,370 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Dec 2020 8:47 AM GMT (Updated: 22 Dec 2020 8:47 AM GMT)

மெக்சிகோவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,25,915 ஆக அதிகரித்துள்ளது.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் முடிவில் 5,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,25,915 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,598 ஆக உயர்ந்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கையை விட, மெக்சிகோவில் அதிக அளவில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அங்கு விரைவில் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அந்நாட்டு அரசு முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story