புத்தாண்டில் மக்களிடம் மன்னிப்பு கோரிய வடகொரியா தலைவர்


புத்தாண்டில் மக்களிடம் மன்னிப்பு கோரிய வடகொரியா தலைவர்
x
தினத்தந்தி 2 Jan 2021 9:31 AM GMT (Updated: 2 Jan 2021 9:31 AM GMT)

பொருளாதார முன்னேற்றம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக மக்களிடம் புத்தாண்டில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரினார்.

சியோல் 

கடுமையான காலத்தில் கூட ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் புத்தாண்டு உறுதி மொழியையும் ஏற்று கொண்டுள்ளார். 

உலகம் முழுவதும் புத்தாண்டு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பிறந்துள்ள இந்த புதிய ஆண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புத்தாண்டிக்கு உலக தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே புயல் பாதிப்பு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வரும் வடகொரிய மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வடகொரிய மக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில், இந்த கடுமையான காலத்தில் கூட ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.புதிய ஆண்டிலும், எங்கள் மக்களின் லட்சியங்களும் விருப்பங்களும் நிறைவேறும், புதிய சகாப்தத்தை கொண்டுவருவதற்கு நான் கடுமையாக உழைப்பேன் என்று சபதமிட்டுள்ளார்.

மேலும் பொருளாதார முன்னேற்றம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காகவும், சர்வதேச தடைகள் மற்றும் கொரோனா வைரஸ் வெடிப்பைத் தடுக்கும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகளின் விளைவாக குடிமக்கள் தாங்கிக் கொள்ள முடியாத  துன்பங்களை அனுபவித்ததற்காகவும்   வட கொரிய தலைவர்  மன்னிப்பு கோரியுள்ளார்.

Next Story