பைசர் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்
மூன்று வாரங்களுக்கு முன்பாக பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட ஜோ பைடன், தடுப்பு மருந்தின் 2-வது டோஸையும் செலுத்திக்கொண்டார்.
வாஷிங்டன்,
உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக்கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், பரவல் அதிகமானது. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். வரும் வாரத்தில் ஜோ பைடன் அதிபராக பதவியேற்க உள்ளார். அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு நேரலையில் கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், பைசர் தடுப்பூசியின் 2-வது டோஸையும் ஜோ பைடன் செலுத்திக்கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க செய்வதே தனது முன்னுரிமையான பணி”என்றார்.
Related Tags :
Next Story