இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியது , சாம்பல்- புகை 5 கி.மீ. உயரம் வரை பரவியது
இந்தோனேசியாவில் இன்று மாலை செமரு எரிமலை வெடித்தது, இதில் சாம்பல் மற்றும் புகை 5 கி.மீ. உயரம் வரை பரவியது
ஜாவா
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமெரு எரிமலை வெடித்து சிதறியது. இதி சாம்பல் மற்றும் புகை வானத்தில் 5.6 கிலோமீட்டர் உயரம் வரை வீசியதாக நாட்டின் எரிசக்தி அமைச்சகத்தின் புவியியல் நிறுவனம் தகவல்கள் தெரிவித்து உள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் செமெரு எரிமலை வெடித்தது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் வீடுகளுக்கு மேல் சாம்பல் மேகங்கள் சூழ்ந்து இருப்பது தெரிந்தது.
இந்தோனேசியாவில் ஏறக்குறைய 130 எரிமலைகள் உள்ளன. இது வேறு எந்த நாட்டையும் விட அதிகம் ஆகும்.ஜாவா தீவில் உள்ள மெராபி எரிமலை மற்றும் சுமத்ராவின் சினாபுங் போன்ற பிற எரிமலைகள் சமீபத்தில் வெடிப்பதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளன.
#SahabatTangguh , Telah terjadi Awan Panas Guguran (APG) Gunung Semeru dengan jarak luncur kurang lebih 4,5 kilometer pada Sabtu (16/1) sore pukul 17.24 WIB. Selengkapnya yuk simak video berikut atau kunjungi https://t.co/vTpiVwuDuF#InfoBencanaBNPBpic.twitter.com/oVbMJfpIK5
— BNPB Indonesia (@BNPB_Indonesia) January 16, 2021
Related Tags :
Next Story