சீனாவில் 109 பேருக்கு கொரோனா தொற்று


சீனாவில் 109 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 17 Jan 2021 7:59 PM GMT (Updated: 17 Jan 2021 7:59 PM GMT)

சீனாவில் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பீஜிங்,

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கட்டுக்குள் இருந்த தொற்று தற்போது மீண்டும் பரவ தொடங்கி இருக்கிறது. நாடு முழுவதும் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

எனினும் இது முந்தைய தினத்தை விட (130 பேர்) குறைவாகும். அதேநேரம் கொரோனாவால் புதிய மரணங்கள் எதுவும் பதிவு செய்யப்படவிலலை. சீனாவில் தற்போது 1,205 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 42 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

புதிய பாதிப்புகளில் 13 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் ஹெபேய், ஹெயிலாங்ஜியாங் மாகாணங்களில் முறையே 72 மற்றும் 12 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த மாகாணங்களில் இந்த மாத தொடக்கத்தில் பொது முடக்கம் போட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story