அமெரிக்கா:துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் பலி


Image courtesy : dailymail.co.uk
x
Image courtesy : dailymail.co.uk
தினத்தந்தி 25 Jan 2021 5:47 AM GMT (Updated: 25 Jan 2021 5:47 AM GMT)

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலை 4 மணிக்கு ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

விரைந்து சென்று பார்த்தபோது கர்ப்பிணிப்பெண் உட்பட 5 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர். கர்ப்பிணிப் பெண் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது பெரும் படுகொலை என மாநகர மேயர் ஜோ ஹாக்செட் தெரிவித்துள்ளார்.

பலியானவர்கள் விவரம் வருமாறு கெஸ்ஸி சில்ட்ஸ் ( 42)  ரேமண்ட் சில்ட்ஸ் ஜூனியர்(42) இவர்களது 18 வயது மகன் எலியா சில்ட்ஸ் மற்றும் மகள் ரீட்டா சில்ட்ஸ் (13)பலியான ஐந்து பேரில் ஒருவர் கர்ப்பிணிப் பெண் கியாரா ஹாக்கின்ஸ் ( 19 )



Next Story