எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு


எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Feb 2021 8:32 PM GMT (Updated: 2 Feb 2021 10:50 PM GMT)

இந்திய ராணுவம் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக, பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்லாமாபாத்,

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வபோது அத்துமீறி இந்திய எல்லைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 5,133 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசுகுற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் 244 தீவிரவாத தாக்குதலில் 62 வீரர்கள் மற்றும் 37 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 221 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று, பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ச் மாவட்டத்தின் மூன்று இடங்களில் அத்துமீறி சிறிய வகை துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், கொத்து குண்டுகளை வீசியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக, பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பாகிஸ்தானியர் காயம் அடைந்ததாக கூறும் பாகிஸ்தான், அந்நாட்டிற்கான இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

2003-ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது குறித்து விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story